காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்தனூர் பகுதியை சேர்ந்த சரவணன்-ஜோதிமணி தம்பதி, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஜோதிமணியின் தோழி, அவரது குழந்தை என மொத்தம் ஆறு பேர் காவரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். விளையாடிக் கொண்டே, ஒருவருக்கு பின்னொருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ஊர்மக்கள், 6 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 4 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரு சிறுவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்