கோயில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது கோயிலில் விற்கப்பட்ட தனியார் நிறுவன ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்ட 3 முதல் 5 வயதுக்குட்பட்ட  90 க்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கபட்ட  குழந்தைகளை சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்