ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
x
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை எனவும் எனவே அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என சொல்ல முடியாது எனவும் தெரிவித்தனர். 

மேலும் மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்றே கட்டுமான பணிகள் நடப்பதால் நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிடாது எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எம்.எல்.ரவி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்