மெக்கானிக் கடையில் திருடிய இருவர் கைது : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் நடவடிக்கை

மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிள், உதிரி பாகம் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மெக்கானிக் கடையில் திருடிய இருவர் கைது : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் நடவடிக்கை
x
* சென்னை ராமாபுரம்  டைமண்ட் தெருவில் வசிக்கும் கௌசிக் ஸ்ரீராம், அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது கடைக்குள் இருந்த மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

* சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் , தோகித்பாஷா ஆகியோர் இருந்ததை கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்.

* முன்பு இருவரும் அதே கடையில் பெயிண்டராக வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று,  கடையின் ஜன்னலை உடைத்து  மோட்டார் சைக்கிள், உதிரி பாகங்கள் மற்றும் 6 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து திருடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்