சென்னையில் கஞ்சா விற்பனை ? - வீடுவீடாக போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் பல வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
x
சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஷெனாய்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கஞ்சா விற்ற சந்திரசேகர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷெனாய் நகர் 
குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான பல வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையால் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்