144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு
x
அப்போது பேசிய அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து வித ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளாதாகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்144தடை உத்தரவுக்கு இணையான தேர்தல் விதிமுறைகள் அடுத்த 48 மணி நேரம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தார். அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயாக கடமையை பூர்த்தி செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்