களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்
களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்
x
சித்திரை திருவிழாவை முன்னிட்டு,  உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக, பெரியநாயகி அம்பாள், பெருவுடையாருக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ராஜ வீதிகளில் கம்பீரமாக ஆடி அசைந்து வலம் வருகிறது. தேருக்கு முன்பாக பாரம்பரிய இசைவாத்தியங்கள் முழங்க, முளைப்பாரி, கோலாட்டம் ஆகியவை களைகட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்