பிரமபுரீஸ்வரர் கோவில் திருகல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.
பிரமபுரீஸ்வரர் கோவில் திருகல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு
x
உற்சவ மண்டபத்தில், சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர்.முன்னதாக அம்பாள் சீர்வரிசையுடன் பக்தர்கள் புடைசூழ திருகல்யாண மண்டபத்தில் எழுந்தருள,சுவாமி மாலையுடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா



சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மீனாட்சி சுந்தரஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மம் பட்டாபிஷேகம் விழா அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்