இளைஞரை நம்பி சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மீட்பு

பணக்காரவீட்டு பையன் போல நாடகமாடிய இளைஞரை நம்பி, கேரளாவிற்கு சென்ற பள்ளி மாணவி, பல நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்...
இளைஞரை நம்பி சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மீட்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு என்ற பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி தேர்வு எழுத சென்ற மாணவி, வீடு திரும்பாத நிலையில், அச்சமடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில், மாணவி பக்கத்து ஊரான கட்டாத்துறையை சேர்ந்த ஜோஸ்பிளின் ராஜகுமாருடன் பழகி வந்த‌து தெரியவந்துள்ளது. அவரது செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போலீசார், அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோனி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். கேரளா விரைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்து, ராஜகுமாரை கைது செய்து, சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது, தினம்தோறும், புது புது உடைகள், வித விதமான இருசக்கரவாகனத்தில் வந்த‌தால், பணக்கார வீட்டு இளைஞன் என்று நம்பி, அவரை காதலித்த‌தாக கூறியுள்ளார். இதையடுத்து, தேர்வு எழுதிய கையோடு மாணவியை  கேரளா அழைத்து சென்ற ராஜகுமார் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். ராஜகுமாரின் நிஜமுகம் தெரிய வரவே, அங்கிருந்து மாணவி தப்பி செல்ல முயன்ற நிலையில், ராஜகுமார், மாணவியை அடைத்துவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர்,  பள்ளி மாணவிகள், எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்