தமிழ் தேசிய மக்கள் கட்சியின் மனுவை பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் கட்சி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
தமிழ் தேசிய மக்கள் கட்சியின் மனுவை பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
தமிழ் தேசிய மக்கள் கட்சி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் கட்சி அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கோரி அரியலூர் காவல் ஆய்வாளருக்கு மனு அளித்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் அதிகாரியை அணுகுமாறு குறிப்பிட்டதாகவும், அதன்படி தேர்தல் அதிகாரிக்கு அளித்த மனுவுக்கு, இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். கோவையில் மே 17 இயக்கம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த  பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சம்பந்த அதிகாரிகளை அணுகி மீண்டும் மனு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   

Next Story

மேலும் செய்திகள்