"திமுகவுடன் பாமக கூட்டணி வைக்காததால் ஸ்டாலின் விமர்சிக்கிறார்" - வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லை என்ற கோபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்களை கடுமையாக விமர்சித்துப் பேசுவதாக கூறினார். அனைவருக்கும் சோறு போடும் விவசாயி தான் கடவுள் என்றும், அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் விவசாயிகள் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
Next Story