தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம் : ஏப். 8 - ல் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம் : ஏப். 8 - ல் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
x
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90 . நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த சிலம்பொலி செல்லப்பன், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்த சிலம்பொலி செல்லப்பன், உடல், சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது 2 வது மகன் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். நாளை, ஞாயிற்றுக்கிழமை, சிலம்பொலி செல்லப்பன் உடல், அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, திங்கட்கிழமை இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்