முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு : நேரில் ஆஜராக கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில், வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, திமுக எம்.பி. கனிமொழிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில், வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, திமுக எம்.பி. கனிமொழிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி , திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற கனிமொழி, முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனுவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் 9 ஆம் தேதி கனிமொழி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
Next Story