மெரினாவில் இடம் தராத அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்" - தயாநிதி மாறன் மக்களிடம் வேண்டுகோள்
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தராத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தராத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், 500, 1000 நோட்டுக்களை செல்லாததாக்கி, சொந்தப் பணத்தை எடுக்க மக்களை மோடி வரிசையில் நிற்க வைத்த நேரத்திலும் கூட, அதிமுக காரர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் புதிய நோட்டுக்கள் கிடைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்திய மக்களை ஏமாற்றி ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கேஸ் விலை என அனைத்தையும் உயர்த்தியது இந்த அரசு தான் என்று மேலும் தெரிவித்தார்.
Next Story