ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணி : மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவு

கார்பன் சோதனை அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட சோதனை நடத்துவது குறித்து மத்திய தொல்லியில் துறை பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணி : மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவு
x
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களின் முடிவுகள் வெளிவந்துள்ளதாகவும்,   ஒரு பொருளின் வயது கிமு 905 என்ற மற்றொரு பொருளின் வயது கிமு 791 என தெரியவந்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதே போல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்