பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரியது அரசு தான் - அமைச்சர் தங்கமணி

ஒரு தொகுதிக்காக கட்சியை தி.மு.க.விடம் அடகு வைத்தவர் ஈஸ்வரன்
பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ.  விசாரணை கோரியது அரசு தான் - அமைச்சர் தங்கமணி
x
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தினமும் ஒரு பொய்யை சொல்லி வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டி உள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எனது வீட்டிற்கு தாசில்தார்களை தினமும் அழைத்து விவாதிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், தேர்தல் ஆணையத்தில் அவர் தாராளமாக புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.பொள்ளாச்சி விவகாரம் மற்றும் ராசிபுரம் கொங்கு திருமண மண்டபம் தொடர்பாக, தேர்தல் முடிந்தவுடன் வேண்டுமானால் விவாதிக்கலாம் என்றும் அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.  ஒரு தொகுதிக்காக தி.மு.க. விடம் கட்சியை அடமானம் வைத்தவர் ஈஸ்வரன் என்றும், பொள்ளாச்சி விவகாரத்தில், சி.பி.ஐ.  விசாரணை வேண்டும் என கேட்டதே அ.தி.மு.க. தான் என்றும் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்