பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணி நிறைவு

அதி வேக சோதனை ஓட்டம் நடத்திய அதிகாரிகள்
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணி நிறைவு
x
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. காரைக்குடி திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, கடந்த சில நாட்களாக, ட்ராலி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் ஆய்வு ரயில் மூலமாக அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்