சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி

சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது.
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி
x
சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது. இரு தினங்களுக்கு அப்பகுதியில் ராஜ்குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடு ஒன்று காணாமல் போன நிலையில், நேற்று ஒரு நாயை சிறுத்தை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்