போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு : திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 -ம் ஆண்டு பட்டுகோட்டையிலும், 2016- ம் ஆண்டு சென்னை தி நகரிலும் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாகவும், தொலைபேசி மூலமாகவும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நேரம் என்பதால் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Next Story