முதியவரிடம் நூதன முறையில் திருட்டு : போலீஸ் என கூறி மிரட்டி வழிப்பறி

சென்னை முகப்பேரில் போலீஸ் என கூறி முதியவரிடம் 4 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடியுள்ளனர்.
முதியவரிடம் நூதன முறையில் திருட்டு : போலீஸ் என கூறி மிரட்டி வழிப்பறி
x
சென்னை முகப்பேரில் போலீஸ் என கூறி முதியவரிடம் 4 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடியுள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் காலனியைச் சேர்ந்தவர் கணபதி. கடந்த 22-ம்தேதி இரவு இவர் நாகை செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கணபதியுடன் பேச்சு கொடுத்தார். திடீரென அங்கு வந்த 4 பேர் தங்களை போலீஸ் கூறி கொண்டு கணபதியை மிரட்ட தொடங்கினர். மேலும், "பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்கிறாயா? என மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று கணபதி கூறியதும், அவரை ஏ.டி.எம். அழைத்து சென்று அவர் அக்கவுண்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளனர். பிறகு, கணபதியை நகை கடைக்கு அழைத்து சென்ற அந்த கும்பல், 4 சவரன் தங்க நகையை வாங்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட கணபதி அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்