பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை - விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை

கோவையில், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது
x
கோவையில், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பன்னிமடை பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்தநிலையில் 7வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர். பிரேத பரிசோதனை நிறைவுபெற்ற நிலையில், சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 7வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து முதல் தகவல் அறிக்கையில், கொலை பிரிவுடன், போக்சோ பிரிவும் சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்கும் பணியை 10 தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்