கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய குடும்பத்தினர் : தந்தை, 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய குடும்பத்தினர் : தந்தை, 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு
x
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை,  மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெமிலி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமது வீட்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, 2 மகன்களுடன் உள்ளே இறங்கினார்.  பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிக்குள் இறங்கிய அவர்கள், விஷவாயு தாக்கியதில் உள்ளேயே மயங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக வடமாநில இளைஞர் சுரதாபாய், லட்சுமிகாந்தன், பரமசிவம் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், விஷ வாயு தாக்கியதில் 6 பேரும் உள்ளேயே உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்