தியாகிகளின் ஸ்தூபி அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

தமிழகத்தோடு கன்னியாகுமரியை இணைக்கும் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக மார்த்தாண்டம் புதுக்கடையில் ஸ்தூபி அமைக்கப்பட்டு இருந்தது.
தியாகிகளின் ஸ்தூபி அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தமிழகத்தோடு கன்னியாகுமரியை இணைக்கும் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக மார்த்தாண்டம் புதுக்கடையில் ஸ்தூபி அமைக்கப்பட்டு இருந்தது. அதை, பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசுப்பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்