மாவோயிஸ்ட் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு : மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா விளக்கம்

மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
மாவோயிஸ்ட்  நடமாட்டம் தீவிர கண்காணிப்பு  : மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா விளக்கம்
x
மக்களவை தேர்தலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக  சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.மேட்டுப்பாளையத்தில் மண்டல அளவிலான தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், வன கிராமங்களில் தேர்தல் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்

Next Story

மேலும் செய்திகள்