பிரபல ரவுடிகள் இருவர் கைது - சிறையில் அடைப்பு

வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது மடக்கிய போலீசார்
பிரபல ரவுடிகள் இருவர் கைது - சிறையில் அடைப்பு
x
திருச்சி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  திருவெறும்பூர் அருகே  காட்டூரில் துணை ராணுவ படை அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தமிழ் என்கிற தமிழரசன்  மற்றும் அவனது நண்பன் பிரபு ஆகிய இருவரும்  வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து  இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து  சிறையில் அடைத்த போலீசார்,   அவர்கள்  பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்  என்றும் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்