வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து.
வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்
x
ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து. சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியான சவுக்கார் பேட்டையில் ஆண்டுதோறும், ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதேபோல இந்த ஆண்டும் அங்குள்ள வட இந்தியர்கள், தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து வர்ணங்கள் பூசியும், இனிப்புகள் வழங்கியும்,  கோலாகலமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

வட மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டம்


இதேபோல, பல்வேறு வடமாநிலங்களிலும் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியது. ஒரு சில மாநிலங்களில், தக்காளிகளை வீசி விளையாடுவது, ஒன்று கூடி சிரிப்பது, என பல வகையான வினோத கொண்டாட்டங்களும் அரங்கேறின. 

Next Story

மேலும் செய்திகள்