காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்
காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது
சென்னை திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பில்,குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.மனுவை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆணையர், லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்
Next Story