நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி
கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம் பகுதியை சேர்ந்த பாபு, கடந்த 2014 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்டதன் காரணமாக கைது செய்யப்பட்டார்.இன்று இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கில் ஆஜரான பாபுவை, நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த அந்த சிறுமி மற்றும் அவரது சகோதரிகள் இருவரும் சரமாரியாக தாக்கினர்.தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பாபு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story