சமூக வலைதளங்களில் பிரசாரங்களை கண்காணிக்க தனிக் குழு - மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்

சமூக வலைதளங்களில் வேட்பாளர்களின் பிரசாரங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
x
சமூக வலைதளங்களில் வேட்பாளர்களின் பிரசாரங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சி-விஜிலி செயலி மூலமாக மக்கள் அளிக்கும் புகார் மீது 30 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், காவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் இணைந்து சென்னையில் 112 குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சார்பு செய்தி வெளியிடும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 18 டிவி சேனல்கள் கண்காணிக்கப்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்