11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சேலத்தில் இதுவரை 50 லட்சம் மதிப்பிலான 11 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், தமிழக அரசின் உத்தரவை சேலம் மாநகரில் 100 சதவீதம் நடைமுறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Next Story