மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

மதுரை மேலூர் சுங்கச்சாவடியில், நடந்த வாகன தணிக்கையின் போது 3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
x
மதுரை மேலூர் சுங்கச்சாவடியில், நடந்த வாகன தணிக்கையின் போது 3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர். மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், கைப்பற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அந்த நகைகள் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்