மேலூர் : கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழந்தது.
மேலூர் : கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழப்பு
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழந்தது. பட்டதரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான கிராமத்து காளை, பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. இந்நிலையில், காளை வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் உயிர் இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு காளைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காளையின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் கவரில் விஷமருந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்