எரி சாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

எரி சாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
எரி சாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
x
புதுக்கோட்டை அருகே எரி சாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சிவகங்கையில் இருந்து சுமார் 36 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றி கொண்டு வந்த டேங்கர் லாரியை,ஓட்டுநர் இச்சடி கிராமத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக சாலையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அப்போது லாரி சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.லாரி ஓட்டுனர் ஹேண்ட் பிரேக் போடாததே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.லாரியில் எரி சாராயம் இருப்பதால், தீ விபத்தை தவிர்க்க, தீயணைப்பு துறையினர் லாரி மீது தண்ணீர் பீச்சி அடித்தனர்

Next Story

மேலும் செய்திகள்