கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் - குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான தண்ணீர் குடிக்க விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் - குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்
x
கடந்த மாதத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதன் காரணமாக வெள்ளரிக்காய், இளநீர், கரும்புசாறு மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மண்பானை விற்பனையும் களை கட்டத் தொடங்கியுள்ளது.தற்போது விற்பனைக்கு வரும் மண்பானைகளில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில்அமோக வரவேற்பை பெற்றுள்ளன. 

இதுகுறித்து மண்பானை விற்பனையாளர் கூறுகையில், வழக்கத்தைவிட 30 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாகவும். அளவைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 300  ரூபாய் விற்கப்படுவதாக கூறியதுடன்,  ஜூன் மாதம் வரை விற்பனை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்