பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் : பார் நாகராஜ் யார்?

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் பின்னணி..
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் பார் நாகராஜ்.இவர் பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்தது.மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கல் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த27-ந்தேதி மாணவியின் சகோதரரை தாக்கிய   வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 28-ந்தேதியே அவர் ஜாமினில் வெளியே வந்தார்.ஏற்கனவே பாலியல் வழக்கில்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சபரிராஜன் ,சதீஸ்,வசந்தகுமார் திருநாவுக்கரசுக்கு பார் நாகராஜ் நண்பர் ஆவார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து பார் நாகராஜ் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்