"தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காதது ஏன்?" - பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி

மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காதது ஏன்? - பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி
x
கடந்த முறை மார்ச் 5-ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், இந்த முறை இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, மோடி சில திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஆணையம் காத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதன்மூலம் தேர்தல் ஆணையம் முடக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்களை தேர்தலுக்கு பிறகு செயல்படுத்த முடியாது என்றார்.
பாஜகவையும், அதிமுகவையும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்