வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி

மணல் திருட்டை தடுக்க முயன்றதால் ஆத்திரம்
வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மணல் திருட்டை தடுக்க சென்ற வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வட்டாட்சியர் புகழேந்தி மணல் கடத்தலை தடுக்க சென்றார். அப்போது மணல் கடத்தி கொண்டு கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற லாரியை வட்டாட்சியர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் மணல் கடத்தி வந்த லாரி, வட்டாட்சியரின் ஜீப்பை வேகமாக மோதிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்