கடத்தப்பட்ட டேங்கர் லாரி மீட்பு - 6 பேர் கைது

மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட டேங்கர் லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
கடத்தப்பட்ட டேங்கர் லாரி மீட்பு - 6 பேர் கைது
x
மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட டேங்கர் லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தப்பட்ட லாரி ஸ்ரீபெரும்புதூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார், லாரியை மீட்டனர். அப்போது, அதில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட போலீசார், வியாசர்பாடி கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரை கைது செய்ததுடன், திருடப்பட்ட கச்சா எண்ணையையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்