வரும் கல்வியாண்டில் 8 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்

வரும் கல்வியாண்டில் 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டில் 8 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
x
3 ,4 ,5, 8 ஆகிய வகுப்புகளுக்கு 2020 - 21 கல்வி ஆண்டில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பாடப் புத்தக தயாரிப்புப் பணி முடிவடையும் நிலையில் இருப்பதால், வரும் கல்வி ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டங்கள் அமலுக்கு வரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதன்படி 8 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வரும் ஜூன் மாதத்திலேயே அமலுக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளதோடு,  அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில்  2, 3 ,4 ,5 ,7, 8 ,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமலுக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்