மின்சார ​ரயில் மோதி ஆயுதப்படை காவலர் பலி

சென்னை குரோம்பேட்டையில் ஆயுத படை போலீசார் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார ​ரயில் மோதி ஆயுதப்படை காவலர் பலி
x
சென்னை குரோம்பேட்டையில் ஆயுத படை போலீசார் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காப்பூர் கிராமத்தை சேர்ந்த திருலோகசந்தர், எழும்பூர் ஆயுதப்படை படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு அவர் திரும்பி கொண்டிருந்தார். குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்