"ஆணுக்கு நிகராக பெண்களும் உயர உழைப்போம்" - ராமதாஸ்
அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் உயர உழைப்போம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் உயர உழைப்போம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், கல்வி, வேலைவாய்ப்புகளைக் கடந்து சட்டம் இயற்றுதலிலும் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மகளிர் முன்னேற்றம் குறித்த அனைத்து இலக்குகளையும் எட்ட இந் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story