11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 914 மையங்களில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்களும், புதுச்சேரியில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 985 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாற்றுதிறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்