திருவள்ளூர் சோதனைச்சாவடி : சோதனையில் சிக்கியது ரூ1.53 கோடி ரொக்கம்
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் தனியார் பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் பயணி ஒருவர் தனது 2 பைகளில் மறைத்து வைத்திருந்த பண பண்டல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 1 கோடியே 53 லட்ச ரூபாய் பணத்தை வெள்ளி பொருட்கள் வாங்க கொண்டு வந்ததாக பணத்தை வைத்திருந்த பயணி நீரஜ் குப்தா கூறியுள்ளார். இருப்பினும் முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் நீரஜிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story