வண்டலூர் உயிரியல் பூங்கா : 2 வங்க புலிகளை தத்தெடுத்தார் நடிகர் விஜய் சேதுபதி

சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளது.
x
சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் பூங்காவில் உள்ள ஆர்த்தி மற்றும் ஆதித்யா ஆகிய 2 வங்க புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்தார். புலிகளின் 6 மாத பராமரிப்பு செலவிற்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷாப்பிங் மால்களை சுற்றாமல் இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்