மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
x
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள  12 சிவத்திருத்தலங்களை 100 கி.மீ தூரம் கால்நடையாகவே நடந்து சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவடைகிறது. சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்களுக்கு திருமலை மகாதேவர் கோயில் முதல் திருப்பன்றிகோடு உள்ளிட்ட  11 கோவில்களிலும் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. 12-வது கோயிலான திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் கேரளா  மாநில பக்தர்களும் பங்கேற்றுள்ளனர். சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்