அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கீரப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
x
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கீரப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக்கரம் கழன்றதை கண்டு சுதாரித்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்