சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் ஆஜர்
ஆறுமுகசாமி ஆணையத்தில், ஏழு சாட்சிகளிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்துகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில், ஏழு சாட்சிகளிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்துகிறது. இதற்காக அப்பலோ மருத்துவர்கள், அருட்செல்வன், ரவிச்சந்திரன், ராமகோபாலகிருஷ்ணன், சஜன் கே ஹெக்டே, மீனாட்சி சுந்தரம், சிவஞான சுந்தரம், ராமகிருஷ்ணன் ஆகியோர் 7 பேர் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்க சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது.
Next Story