தந்தி டிவி செய்தி எதிரொலி : மானம்பாத்தான் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் குறித்து தந்திடிவி செய்தி எதிரொலியாக சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள மானம்பாத்தான் வாய்க்காலில் பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
தந்தி டிவி செய்தி எதிரொலி : மானம்பாத்தான் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் குறித்து தந்திடிவி செய்தி எதிரொலியாக சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள மானம்பாத்தான் வாய்க்காலில் பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். அந்தப் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தந்திடிவி களநிலவரத்துடன் செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சேத்தியாதோப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள், தண்ணீர் திறந்துவிட்டனர். தண்ணீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள், தந்திடிவிக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்