கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் : வீடுகளை பூட்டி சீல் வைத்தது அறநிலையத்துறை
திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு சொந்தமான மூன்றாயிரம் சதுரஅடி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 5 வீடுகளை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சென்ற அறநிலையத்துறை ஊழியர்கள், வீட்டின் பொருட்களை வெளியே எடுத்து வைத்து, வீடுகளை பூட்டி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்செல்வி என்பவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தமிழ்செல்வியை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
Next Story