மக்களவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ, டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நாளை அனைத்து துறை செயலாளர்களுடனும், நாளை மறுநாள் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Next Story